Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுந்ததிர தின விழா

ஆகஸ்டு 15, 2019 10:16

திருவண்ணாமலை: செங்கம் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளி
 மேல் செங்கம் புதூரில் நாட்டின் 73 மற்றும் ஆண்டு சுதந்திர 
தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செங்கம் வட்டாரக் கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் முனுசாமி வரவேற்றார்.  இவ்விழாவில் மேலாண்மை  குழுத் தலைவர் கவிதா மற்றும் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் தமிழ்செல்வன் குப்புசாமி மற்றும் ஆசிரியர்கள் வசந்த மல்லிகா சுந்தர் விநாயகம், மற்றும் பெற்றோர்கள் ஊர் பெரியோர்கள் முன்னால் மாணவர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பள்ளிக்கு  9000 மதிப்புள்ள பீரோ ஒன்றை எ.சேகர் தர்மகர்த்தா  வழங்கினார். மேலும் இவர் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேச்சு கவிதை நடனம்  போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாரத் கல்வி அலுவலர் சுப கோவிந்த ராவ் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழா முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு உதவி ஆசிரியர் சுந்தர் விநாயகம் நன்றி கூற நாட்டு மண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
 

தலைப்புச்செய்திகள்